விநாயகர்  துதி :

 

ஐந்து கரத்தானை-ஆணை முகத்தானை
வேலோடு விளையாடும் வேலனின் சோதரனை
விக்னங்கள் களையும் வினாயகப் பெருமானை
பரமபதம் அருளும் பார்வதி புத்திரனை
என்னாளும் மறவாமல் நினைப்பாய் நெஞ்சமே

 

தேவியின் துதி :

 

கழுத்தில் கருக மணியும் காதில் கனகதோடும்.
கதம்பமலர் மாலையணிந்து மஞ்சள் குங்குமம் புஸ்பம் தரித்து
கரத்தில் அபய முத்திரையும்,பூரண சந்திரனின் முகப்பொலிவும்
எல்லாபுரமாளும் ஏகநாயகியே,சுயம்புவாய் அமர்ந்த சுமங்கலியே
கைவங்கிரிவாமும் பரமனின் மடியர்ந்த
பவானியே நின்பாதம் போற்றி! போற்றி ! போற்றி !

 

ஓம் ஸ்ரீ பவானியின் துதிப்பாடல்கள் :

   "உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா" ராகம்

 

1. அன்புருவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

    ஆயிரம் கண் படைத்தவளே தேவி பவானி
    இதயத்தில் வந்தமர்வாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

4. ஸ்வரியே எனையாளும் தேவி பவானி
    உலகாளும் உத்தமியே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
    ஊழ்வினையை அகற்றிடுவாய் தேவி பவானி
    எங்கும் நிறைந்தவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

8. ஏழுலகம் காப்பவளே தேவி பவானி
    ஐம்புலன்கள் அடக்கி நின்றேன் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
    ஐயத்தை போக்கிடுவாய் தேவி பவானி
    ஒளிவடிவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


12. ஓங்கார ரூபிணியே தேவி பவானி
      ஒளஷதமாய் நின்றவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
      அஃது இங்கு வந்தவளே தேவி பவானி
      கருணை வடிவானவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


16. காத்தருள்வாய் என்னாளும் தேவி பவானி
     சன்மார்க்க நாயகியே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     சான்றோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா
     துன்பங்கள் போக்கிவிடுவாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


20. தூயவளே அருளரசியே தேவி பவானி
     திக்கற்றோர் குறை தீர்ப்பாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     தீயோரை அழிப்பவளே தேவி பவானி
     குற்றங்கள் நீக்கிடுவாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


24. குறைகளைந்து குணம் வளர்ப்பாய் தேவி பவானி
      கண் கலங்கி வந்தவர்கள் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

     கவலைகள் தீர்த்திடுவாய் தேவி பவானி
     பரமசிவன் பத்தினியே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


28. பாவங்கள் போக்கிடுவாய் தேவி பவானி
     அன்னையுன்னை தேடி வந்தேன் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
    ஆதரித்தருள்வாயே தேவி பவானி
    திருநீற்றை அணிந்திருப்பாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


32. தீராத வினை தீர்ப்பாய் தேவி பவானி
     வினைதீர்க்கும் வித்தகியே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     வீரத்தை கொடுப்பவளே தேவி பவானி
     வேப்பிலையே அணிந்திருப்பாய்  தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


36. வேம்புலிமயாய் அமர்ந்தவளே தேவி பவானி
      நாடாளும் நாயகியே தேவி பவானியம்மா  
                                                                       -தேவி பவானி
      நாரணணின் சோதரியே தேவி பவானி
      புற்றினுள் அரவாக வாழ்வாய் தேவி பவானியம்மா 
                                                                       -தேவி பவானி


40. பூவையே பராசக்தியே பவானி
     மங்களமாய் வீற்றிருப்பாய் தேவி பவானியம்மா 
                                                                       -தேவி பவானி
     மாங்கல்யம் காத்திடுவாய் தேவி பவானி
     பக்தர்களை காத்திடுவாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

44. பாங்காள உத்தமியே தேவி பவானி
     பரமபதம் அளித்திடுவாய் தேவி பவானியம்மா 
                                                                       -தேவி பவானி
     பணிந்திட்டேன் உன் பாதம் தேவி பவானி
     ஆரணி ஆற்றங்கரையில் அமர்ந்தாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


48. ஆதி பராசக்தி தேவி பவானி
      பெரியபாளையத்துறையும் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
      பெரியாயியாய் அமர்ந்தாய் தேவி பவானி
      அங்கம் மறைந்து எங்கும் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    


52. எங்கும் உரைந்திடுவாய் தேவி பவானி
     உலகத்து மக்களிடம் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    
     ஒழுக்கத்தை உணர்ந்திடுவாய் தேவி பவானி
     நல்லோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    


56. நன்மைகளை செய்திடுவாய் தேவி பவானி
      நாமம் ஆயிரம் படைத்தாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    
      நாகேஸ்வரி தாயே பவானியம்மா
      மஞ்சள் கனி தந்த தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    
60. மஞ்சள் பிணி தீர்த்திடுவாய் தேவி பவானி
     அஞ்ஞானம் போக்கிடுவாய் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    

    அறிவை வளர்த்திடுவாய் தேவி பவானி
    எல்லாபுரம் உறைபவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    


64. எல்லாம் அறிந்தவளே தேவி பவானி
     என் கடமை நான் செய்ய தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     எனக்குதவி புரிந்திடுவாய் தேவி பவானி
     உன் மீது பக்தி கொண்டேன் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    


68. உன்னை இனி நான் மறவேன் தேவி பவானி
     வாழ்க்கை என்னும் கடல் கடக்க தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    
     வந்து துணை நீ புரிவாய் தேவி பவானி
     நிலை இல்லா இல்வாழ்க்கை  தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    


72. நினைத்தாலே நடுங்கிடுதே தேவி பவானி
     கருமை நிறம் கொண்டவளே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி    
     கடைக்கண்ணால் பார்த்தருளம் தேவி பவானி
     ஏகஸ்வரூபியே தேவி பவானியம்மா 
                                                                       -தேவி பவானி


76. ஏழை எனக்கருள்வாய் தேவி பவானி
      நல்லறிவு பக்தி ஞானம் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     நாளும் நான் பெற வேண்டும் தேவி பவானி
     திங்கள் மும்மாரி பெய்ய தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி

 

80. திருவருளை நாடுகின்றேன் தேவி பவானி
     அகமுருகி பாடுகின்றேன் தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     அன்புடனே எனக்கருள்வாய் தேவி பவானி
     ஆசை,பயம்,கோவம்,பொய்  தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     அகன்றிடவே அருள் புரிவாய் தேவி பவானி
     உலகம் செழித்திடவே தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி
     உத்தமியே அருள்புரியும் தேவி பவானி
     எல்லை இல்லா உன் கருணை தேவி பவானியம்மா
                                                                       -தேவி பவானி


88. எல்லோருக்கும் பொழிந்திடுவாய்  தேவி பவானி
      வேதங்கள் தழைத்திடவே தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி
     வேண்டும் வரம் தந்திடுவாய்   தேவி பவானி
     அறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி


92. புவனேஸ்வரிதாயே தேவி பவானி
     எங்கள் குல நாயகியே தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி
     என்னாளும் காத்திடுவாய் தேவி பவானி
     அறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி


96. அரவுடனே நிற்பவளே தேவி பவானி
     மூவர்க்கு முதல்வனே தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி
     முக்கண்ணன் பத்தினியே தேவி பவானி
     அண்டமெல்லாம் ஆள்பவளே தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி

 

 

100. ஆனந்த ரூபினியென தேவி பவானி
        சந்திரபிறை தரித்தவளே தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி
       சந்திரன் போல் குளிர்ந்தவளே தேவி பவானி
       நேசமுடன் நெஞ்சுருகி தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி

 


104. நின் புகழை பாடுகின்றேன் தேவி பவானி
        வாழிய நின் திருநாமம் தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி
       வாழிய நின் புகழ்யாவும் தேவி பவானி 
       வாழிய இவ்வுலகனைத்தும் தேவி பவானியம்மா
                                                                      -தேவி பவானி

 


109. வாழ்த்திடுக நலம் யார்க்கும் தேவி பவானி
       ஸ்ரீ பவானியின் திருவடிகளே சரணம் சரணம்
       பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.